Friday 3rd of May 2024 06:57:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
மின்னல் தாக்கி இந்தியாவில் 83 பேர் பலி!

மின்னல் தாக்கி இந்தியாவில் 83 பேர் பலி!


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 83 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக பீகார் மாநிலத்தில் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பரவலாக சொத்துகளும் சேதமேற்பட்டுள்ளதாக பிகார் மாநில பேரிட மேலாண்மைத் துறை இன்று அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாக கோபால்கஞ் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்த ஒவ்வெருவர் சார்ந்தவர்களுக்கு 4 இலட்சம் (இந்திய மதிப்பில்) வழங்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE